( நமது நிருபர்கள்)
கல்முனை றினோன்
விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்துள்ள
Renown Sixes Tournment – 2019 போட்டித் தொடரில் கல்முனை மண்ணில்
சாய்ந்தமருதூரின் தாய்க்கழகமான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம்
நடைபெற்று முடிந்த 3 போட்டிகளிலிலும் தொடர் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு
முன்னேறியுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி
விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும்
முதலாவது
போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தை
24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம்
5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப்
பெற்றனர்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா விளையாட்டுமுக்கழகம் 5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 44 ஓட்டங்களை
மாத்திரமே பெற்று தோல்வியினை தளுவிக் கொண்டது.
இப்போட்டியில்
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் அஸ்மி சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது
போட்டியில் நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக்கழகத்தை 4 விக்கட்டுக்களினால்
வெற்றி பெற்றது.
முதலில்
துடுப்பெடுத்தாடிய நிந்தவுர்
இம்ரான் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில்
2 விக்கட்டுக்களை
இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுமுக்கழகம் 3.1 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 47 ஓட்டங்களைப்
பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டிக் கொண்டது.
இப்போட்டியில்
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட்
பயாஸ் சிறப்பாட்டக்காரராக
தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது
போட்டியான
கால் இறுதிப் போட்டியில் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தை 9 ஓட்டங்களினால்
வெற்றி பெற்றது.
முதலில்
துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது
பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில்
2 விக்கட்டுக்களை
இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுமுக்கழகம் 5 ஓவர்களில்
2 விக்கட்டுக்களை
இழந்து
47 ஓட்டங்களைப்
பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டிக் கொண்டது.
இப்போட்டியில்
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த முஹம்மட்
நிப்ராஸ்
சிறப்பாட்டக்காரராக தெரிவு
செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment