ஒத்திவைக்கப்பட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் பிரசாரம் அம்மன் குழுத்தியின் பின்பு ஆளும் ஜ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரசாரப்பணிகள் காரைதீவு சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பூசையுடன் ஆரம்பமானது. ஆலய குரு சிவஸ்ரீ;உமாமகேஸ்ரவக் குருக்கள் ஆசி வழங்கினார். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா ஆளும் ஜ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் சகிதம் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜுலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment