இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் சாய்ந்தமருதில் தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது சிங்கள கலாச்சாரத்துக்கு அமைவாக கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமைகுறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதிர்ப்தியடைந்துள்ளார்.
அண்மையில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தேசிய இளைஞர் சேவைகள்மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் திணைக்கள காரியாலயம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில்
திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்களை மகிழ்விப்பதற்காக இடைக்கிடையில் கவர்ச்சியான உடையணிந்த சிங்கள யுவதிகளின் நடனங்களும் நடத்தப்பட்டன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சு அதிகாரிகளை கடுமையாக திட்டியதாக அமைச்சரின் ஊடக செயலாளர் சட்டத்தரணி எவ்.எம். ஹென்ரிக்ஸ் தெரிவித்தார்.
"சாய்ந்தமருது பிரதேசம் பூரணமாக ஒரு முஸ்லிம் கிராமம். அத்துடன்இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; என்பதைசுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அங்கு முஸ்லிம்களின்கலாசாரத்திற்கு முரணான வகையில் நிகழ்ச்சி நடத்தியமை குறித்து தன்செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை திட்டினார். அத்துடன் இனிமேல் அமைச்சின் கீழ் நடைபெறும் எவ்வித வைபவங்களின் போது நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறும் உத்தரவிட்டார்.
அண்மையில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தேசிய இளைஞர் சேவைகள்மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் திணைக்கள காரியாலயம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில்
திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்களை மகிழ்விப்பதற்காக இடைக்கிடையில் கவர்ச்சியான உடையணிந்த சிங்கள யுவதிகளின் நடனங்களும் நடத்தப்பட்டன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சு அதிகாரிகளை கடுமையாக திட்டியதாக அமைச்சரின் ஊடக செயலாளர் சட்டத்தரணி எவ்.எம். ஹென்ரிக்ஸ் தெரிவித்தார்.
"சாய்ந்தமருது பிரதேசம் பூரணமாக ஒரு முஸ்லிம் கிராமம். அத்துடன்இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; என்பதைசுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அங்கு முஸ்லிம்களின்கலாசாரத்திற்கு முரணான வகையில் நிகழ்ச்சி நடத்தியமை குறித்து தன்செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை திட்டினார். அத்துடன் இனிமேல் அமைச்சின் கீழ் நடைபெறும் எவ்வித வைபவங்களின் போது நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment